சொடுக்குக் கதைகள்/அழகியசிங்கர்

Child Walking with Two Fathers

1. அவன் அந்தக் காக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது வீரிட்டு

 அலறிக் கொண்டிருந்தது.

2. வீட்டிலுள்ள புத்தகங்கள் கலைந்திருந்தன

 . அவன் மனநிலையை எடுத்துக் காட்டியது.

3. காலையில் எழுந்தவுடன் மஞ்சள் நிறப்பூக்கள்

 அவனை வரவேற்கும். ஆனால் இப்போதெல்லாம் இல்லை. யாரோ பூக்களைப்

 பறித்து விடுகிறார்கள்.

4. அவன் 18 கே பஸ்ஸில்

 போய்க்கொண்டிருக்கிறான். பஸ்

 எங்கே நிற்குமோ அதுவரை.

5. அந்தக் கல்யாண மண்டபத்தில் மேள சப்தமும் நாதஸ்வரமும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தன.