சம்த்ரூல் ரின்போச்சே கவிதை

தமிழில் : க. மோகனரங்கன்

🌷
ஒரு அரசனின் அங்கி அல்லது
ஒரு பழைய போர்வை
உங்களை வெதுவெதுப்பாக வைத்திருக்கவியலும்.
தங்க சிம்மாசனம் அல்லது
கட்டாந்தரை
உங்கள் இருக்கையாகக் கூடும்.
ஒரு அரண்மனை அல்லது
ஒரு மண் குடிசை
உங்கள் வசிப்பிடமாகலாம்.
ஒரு ஆபரணத்தட்டு அல்லது
ஒரு மரக்கலம்
உங்கள் உணவை கொண்டிருக்க முடியும்.
வெளி உலகம்
உங்கள் உள் அமைதியை அழிக்கவியலாது.
ஆனால் உங்கள் பற்றும் வெறுப்பும்
அதைச் செய்யும்.