நகுலனின் சுருதி கவிதைகள்

தேடல்

எதைத் திறந்தால்
என்ன கிடைக்கும்
என்று
எதை எதையோ
திறந்துகொண்டே
இருக்கிறார்கள்.

நினைவு

‘யார் தெரியவில்லையே”
என்றார்
அப்பொழுது அவருக்கு
வயது 68 இருக்கும்
“டி. கே. துரைசாமி”
என்றேன்
“அடப் பாவி, நீயா?” என்றார்
வழக்கம்போல் பொழுது
விடியும் வரை
பேச முடியாது அவரால்
என்று கண்டவன்
“உவப்பக் கூடி
உள்ளப் பிரிதல்”
இனி இயலாது
என்று
வழி நீள
அவர் நினைவு உடன் வர
ஊர் திரும்பினேன்.

One Comment on “நகுலனின் சுருதி கவிதைகள்”

Comments are closed.