
பூரான் ஒன்று நடந்து போய்க்கொண்டிருந்தது.
தவளை ஒன்று அதனிடம் வந்து ஒரு கேள்வி கேட்கலாமா என்றது.
பூரான் சரி என்றது.
“எப்படி இத்தனை கால்களில் நடக்கிறாய்?
நான் நான்கு கால்களுக்கே திண்டாடுகிறேன்,
நூறு கால்கள் உனக்கு?
எப்படி மேனேஜ் செய்கிறாய்?
எதை முதலில் எடுத்து வைக்க வேண்டும்?
எதை அடுத்து நகர்த்த வேண்டும்?
எதை எதை இணைத்து நகர்த்த வேண்டும்?
இப்படியெல்லாம்?”
-இந்தக் கேள்விக்குப் பிறகு பூரான் யோசிக்க ஆரம்பித்தது, அதன் பிறகு பூரானால் நடக்கவே முடியவில்லை.

சிந்திக்க வைக்கும் கருத்துள்ள கவிதை!
எளிமையான பொருள் நிறைந்த கவிதை சார். வாழ்த்துக்கள்.