நகுலனின் சுருதி கவிதைகள்

இடையில்

“ஏன்
இப்படிக் குடிக்கிறீர்கள்?”
என்று கேட்டான்
“ஏன்
இப்படி வாழ்கிறீர்கள்?”
என்று நான் கேட்கவில்லை
உங்கள் வாழ்வுக்கும்
என் சாவுக்கும் இடையில்
வேறொன்று
நிகழ்ந்து
கொண்டிருக்கிறது.

குழப்பம்

பார்த்துக்கொண்டு
நின்றேன்
மண்டை உடையாமலிருக்க
விநாயகர் சிலை முன்
ஒரு தேங்காய்
உடைந்தது
யாருடைய குரூரம்
அல்லது நகைச்சுவை
என்று