அழகியசிங்கர்
1.. அனந்தகிருஷ்ணன் அவர் மனைவியுடன் பேசவில்லை. கிட்டத்தட்ட ஆறுமாதமாகிவிட்டது. இது குறித்து அவர்கள் பிள்ளையும் பெண்ணும் கவலைப்படவில்லை.
- வீட்டில் யாருமில்லை என்பதால் உடம்பில் உள்ள எல்லாத் துணிமணிகளையும் அவிழ்த்துப் போட்டான். ஆனால் சுவரிலிருந்த பல்லி அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.
“
3.. திருப்பதியில் வயது மூப்பு காரணமா எங்களை அனுப்புவார்களா உறுதி செய்யவும் என்று தம்பிக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான்.
“
4.. அந்த நூல்நிலையத்தின் வாசலில் புத்தகங்களை விற்பதற்காக வைத்திருந்த போது ஈ காக்கா புத்தகங்களைப் பார்க்க வரவில்லை. எட்டிப் பார்க்க வில்லை. காக்கா கூட கரையவில்லை.
5.. அவர் ஒவ்வொரு வாரமும் சூமில் கூட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். சிலர் வந்து கவிதைகள் வாசிக்கிறார்கள், சிலர் கதைகளைப் பற்றிப் பேசுகிறார்கள்.