நகுலனின் சுருதி கவிதைகள்

இவைகள்

ஒரு பறவையின் நீலச் சிறகு
உன் உள் நோக்கிய பார்வை
நான் வீட்டைப் பூட்டிச்
சென்று வீடு திரும்பியதும்
வீட்டின் கதவிற்கு
முன் தளத்தில்
தபால்காரன்
விட்டெறிந்த
சிதறிக்கிடக்கும் கடிதங்கள்
என் வருகைக்காகக்
காத்துப் பதுங்கி
முகம் பதித்து
கண்கள் நட்டுக்
காத்திருக்கும்
அந்த மஞ்சள் நிறப்
பூனை.

உள்

வீட்டிற்குள்
இருந்தோம்
வெளியில்
நல்ல மழை
ஒரு சொரூப நிலை.