உள்ளொலி/சிறகா

அன்பின் உள்ளொலியை
புல்லாங்குழல் இசை
குழைத்து,

புவியெங்கும் விண்
தண் ஒளி அலை
படரவிட்டு,

இதயங்களில் ஆடும்
நடனம்
புலன் வழி
கலந்து களி
கொள்ளச்
செய்யுமே மாந்தரை.