வண்ணதாசன் கவிதை

இந்தப் பக்க விழுதுகளில்
ரொம்பநேரமாக
சிறுமி ஊஞ்சல் ஆடுகிறாள்.
அந்தப் பக்கத்து விழுதுகள்
அசையாமல் நிற்கின்றன
மூஞ்சியைத் தூக்கிவைத்துக்
கொண்டு.

One Comment on “வண்ணதாசன் கவிதை”

  1. அந்த பக்கத்தில் உள்ள விழுதுகளுக்கு குழந்தைத்தனமான பொய் கோபம்தான் இருந்திருக்கும்.

Comments are closed.