
ஒரு மூத்த துறவியும் அவரது இளம் சீடரும் காட்டில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது எதிரில் இன்னொரு மூத்த துறவியும் அவரது இளம் சீடரும் வந்தார்கள். ஒரு மூத்த துறவி இன்னொரு மூத்த துறவியைப் பார்த்து “வணக்கம் புத்தரே” என்றார். அவரும் “வணக்கம் புத்தரே” என்றார். பிறகு இருவரும் வெவ்வேறு திசைகளில் செல்ல, ஒரு சீடர் “உங்களுக்கு அவரை முன்பே தெரியுமா?” என்று தனது குருவிடம் சந்தேகம் கேட்டார். “தெரியாது. ஆனால் எங்கள் இருவருக்குமே எதிரொலி விளையாட்டு தெரியும்” என்றார் துறவி.
