இணையேதுமில்லை /ஆர் வத்ஸலா

தமிழன் என
மார் தட்டியவன்
வந்தே மாதரம் என
பாரதத்தை கொண்டாடியவன்
அச்சமில்லை என சூளுரைத்தவன்
மனதில் உறுதியும்
வாக்கினில் இனிமையும்
யாசித்தவன்
மனைவியை இணையாகக்
இருத்தியவன்
அவனுக்கேது இணை

One Comment on “இணையேதுமில்லை /ஆர் வத்ஸலா”

Comments are closed.