குறள் என்பா 6

செல்வி பிரகாஷ்  

காதலை எழுத கவிதையைத் தேடினேன்
கையில் கிடைத்தது என்பா

கடந்து போன கவிதைகள்சொல்கின்றன
கட்டுண்ட எனது வினாடிகளை

என்முன் நிற்கும் நீதானே மலர்?
நான் ஏன் வாடினேன்?

நீ சிரிப்பதற்கு கிடைத்த இடம்
என் கண்ணீர் துளிதானா?

மௌனத்தில் முட்டி நிற்கும் வார்த்தைகளில்
தளும்புகிறது காதலின் கதறல்

மழையின் கடைசி சொட்டு கவிதையாய்
உன் புன்னகையில் கவிதை