நினைவுச்சுவடு/க. நா. சு. 

நீள நினைவுக்கும் முடிவேது? கணக்கில்லாத பழம் ஏடுகள் பல

புரட்டி நினைவுப்பாதை

 வகுத்து நினைவுச் சுவட்டோடு

 ஓடி

எத்தனையோ மங்கலான, அருவங்கள் பலவும் எழுப்பி

ஏற்றிவைத்த ஒளிகாணாத

 விளக்கிது காண் – என் உள்ளம்

மரமொன்றும், மலரென்றும், குழந்தை குமரியென்றும்

தீ வான் பிளிம்பென்றும்

, பலசுடர் விட்டு எல்லாமும்

ஒரு புள்ளியில் உள்ளடக்கி புள்ளிக்குள் மையத்தில்

மறைந்து தேய்ந்து இல்லாமற்போவதும்

 விந்தையே!

சுழலவிட்ட கோளதுவாய்குரல் கூவிக்

 கிழித்துக் கோடுகள்

பலவும் காலத்திலே கீறி அறியாத விசையாலே உருண்டோடி

கீழ்மேல் மேல் கீழாய்

, நடுவது பக்கமாய் பக்கம் நடுவாய்ஆழி ஆழி

 உருட்ட வேகம் கெட்டே நினைவும் அழிந்ததே.மலர்ந்ததமிழ்ந்த

 நினைவும் காலமெனும் கனவினிலே கருத்தவிந்த

 காட்சியும், நெஞ்சம் நினைத்து உருவு தந்ததே!