மாபெரும்_உழைப்பாளி/சத்தியநாராயணன்

இவர் பெயர் இசக்கியாபிள்ளை. 95 வயது இளைஞர்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வடக்கு அய்யனூர் தெருவில் வசிக்கிறார்.

மெயின் பஜாரில் காலை உணவகம் நடத்துகிறார். இவர் கடை இட்லி மிகவும் பிரபலம். இட்லி, தேங்காய் சட்னி, மல்லி சட்னி, உ.வடை மட்டுமே. ….

காத்திருந்துதான் சாப்பிடவேண்டும்.

13 வயதில் இந்த தொழிலுக்கு வந்தவர் இன்று வரை உழைப்பையும் , உணவு சுத்தத்தையும் மட்டுமே நம்புகிறார்.

காலை 5 மணிக்கெல்லாம் குளித்து, இறைவனை வணங்கிய பிறகு நடந்தே தான் கடைக்கு வருவார்.

இவர் வீட்டிலிருந்து கடைக்கு சுமார் 1.1/2 கிலோ மீட்டர் வரும். இன்றைய இளைஞர்களுக்கு உழைப்பின் முன் மாதிரி இவர். உழைப்புக்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு இந்த இசக்கியாபிள்ளை ஒரு முன்னுதாரனம்.

சாதனையே செய்யாமல் வாழ்நாள் சாதனையாளர் என சொல்பவர்களுக்கு மத்தியில் இவர் ஒரு மிகப்பெரிய வாழ்நாள் சாதனையாளர்தான். நெஞ்சை நிமிர்த்து தலைவணங்குகிறேன் இந்த (இளைஞர்) முதியவர் இசக்கியாபிள்ளைக்கு!!

Sathiya Narayanan S முகநூல் பக்கத்திலிருந்து…