நகுலனின் சுருதி கவிதைகள்

நகுலன் 

இங்கும்

கத்தாழைச் செடி
சப்பாத்தி முள்
“பாலைவனச் சோலைகள்
எனத்
‘தோற்றமளிக்கும்
கானல் நீர்ப் பரப்புகள்
ஊர்ந்து செல்லும்
ஒட்டகங்கள்
இங்கும்
உயிர் சலித்துக்கொண்டிருக்கிறது.

புணர்ச்சி

பாம்புகள்
புணர்ச்சி
பழகுதல்
உண்டு
“புரை தீர்ந்த
நன்மை
பயக்க வேண்டும்”
என்ற வேகம்
அவைகளுக்கில்லை.