பொதிசுமக்கும் நாற்காலி/அழகியசிங்கர்

என் வீட்டில் நாற்காலியும் புத்தகங்களைச் சுமக்கின்றன.

அதற்கும்
தெரியும் அவற்றின் வாசனை

அதனால்தான்
என் இல்லத்தில்
நாற்காலியும்
பேசத் தொடங்கும்

கவிதை வாசிக்கும்
கதைகள் சொல்லும்
பட்டிமன்றப் பேச்சாளர்
மாதிரி இலக்கியம்
பேசும்