ஆ’ என்று முடியும் கவிதை/க நா சு

எல்லை
யில்லாதோர்
தொல்லையிலே

வரம்பில்லாத
தோர் வேண
கிரியிலே

வந்து
போன
தோர்

ஆன்ம
விருத்தி
அரவணைப்பிலே

காய
கல்பம்
செய்யு

மோர்
குருவின்
காலடியிலே

எழுந்து
துடித்த
தோர்

வேகம்
கெட்ட
வேகம்

கொடுத்
துதவு
மானால்

எங்கு
நின்று
எங்குப்

போய்
அடங்கி
மூளும்

உறவு
என்பது
எப்படியோ

கயிறு
கயிறாத்
திரியும்

வேண
மட்டும்
எட்டும்

சொல்லத்
தெரியாத
அகராதி

விளிம்பிலே
அனு
பந்தத்திலே

புத்தகத்திலே
புத்தக
மார்ஜினிலே
அட்டைக்கும்

அப்பாலே
காணாதது
கண்டு

எட்டாதது
எட்டி
சொல்லாதது

சொல்லிப்
புரியாதது
புரிந்து

ஒட்டாதது
ஒட்டி
ஓடாதது

நிற்க
நிற்காதது
நிலைக்க

நிலைக்காதது
நீள
உருண்டு

திரண்டு
உருவம்
அருவம்

பெற
அற்று
விழ

எப்
பப்
படியோ

ஒத்தை
வழிப்
பாதை

அது
போனால்
மீளாது

மீண்டால்
காணாது
கண்டால்

மறையாது
கண்ணுக்
குள்ளே

குத்திச்
சொருகி
விடும்

மறக்காத
மோனம்
சிறக்காத

ஒலி
அகராதி
அற்று

ஒழிந்த
சொல்
கற்றுத்

தெளிந்த
குழப்பம்
துயரத்தின்

முடிவு
எல்லைக்
கோடிட்டுக்

காட்டக்
கூட்டியதும்
அற-

அறம்
செய்வது
மற்று

இன்பம்
கண்டதும்
வீடு

துன்பம்
விண்டது
மிச்சம்

சொச்ச
மெல்லாம்
உருட்டித்

திரட்டி
மனித
உருக்

கொண்டு
எழுந்து
நின்று

கூத்தாடக்
கூனிகள்
கூடி

ஆடக்
கோயில்
யாளி

எட்டித்
தூணில்
சாய்ந்து

அசைந்து
நின்று
துதிக்

கை
நீட்டி
விழுங்க

முயல
கல்லும்
சாந்தும்

கண்ணும்
கற்பனையும்
-ஐயோ!

அலறி
வீழ்ந்து
கண்

மூடிப்
பக்தி
ஒழுக

கருங்கல்
கடவுளைக்
கை

தொழ-
தொழு
தெழ

மெய்
விதிர்த்துக்
கண்

ணீர்
சோர
ஊற்றுப்

பெருக-
பாட்டும்
பெருக

போதுமே
ரெண்டு
வரி!

என்னையும்
போலேவே
நிறையப்

பாடினார்
பாடினார்-
பாடி

ஆடினார்-
ஏனோ
ஆடினார்!

எல்லை
யில்லாத
தொல்லை

பக்திப்
பொய்யை
மெய்

என்று
நம்பி-
எத்தித்

திரிந்து
எடுத்
தோதி

ஓதியவர்
பெரியவர்
காண் –

இக்
காலப்
பிரகலாதன்

காண் –
என்று
முருகன்

அருள்
வேட்டு
வேட்டு.

வெத்து
வேட்டு
சப்தம்

ஒலி –
எவ்வொலிக்கும்
நயம்

ஒன்று
உண்டு –
கண்

சொருகி
டேப்
ரிகார்டர்

விசை
தட்டி
விட

மனப்
பாடம்
உருண்

டோட
மணிக்
கணக்

காகுமது
கண்டு
பேச

அழைப்பார்
ஓராயிரம்
பேர்

காண் –
டேப்
சுற்றி

வரும்
சுற்றி
வரும்

சுற்றி
வரும்
சுற்றிச்

சுற்றி
வரும்
நாலாவது

பேச்சாம்
பன்
னிரண்டாவது

பேச்சும்
ஒன்றே
காண்!

இடையி
லுள்ள தெல்லாமும்
அஃதே!

அலையும்
ஜலமும்
ஒன்றே

காண் –
பாம்பும்
பழுதையும்

ஒன்றே
காண் –
மண்ணும்

குடமும்
ஒன்றே
காண்!

நீயும்
நானும் –
ஆ!

(இலக்கிய வட்டம் – 24.04.1964)