பட்டாசு – பட்டாச்சா /சுரேஷ் ராஜகோபால்

(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும்
நிகழ்வில் வாசித்த கவிதை )

#
தீபாவளி வருகுது
ஊரெல்லாம் வெடி வானம்
பையனோ பட்டாசு பட்டாசு
என்றே அப்பாவிடம் நச்சரித்தான்
அரைமனதோடு அப்பாவோ
கடைவீதி போய் அவன்
கேட்டதை வாங்கினார், பையனும்
பைக்குள் இருப்பதைக் காணத்துடித்தான்
விடிந்தது, தீபாவளி, பையும் கைக்கு
வந்தது, ஆசையோடு வெடித்தவன்
அழுதுகொண்டு வீட்டினுள் வந்தான்
வந்தவன் கையில் தீக்காயம், தந்தை
கோபத்துடன் “பட்டாச்சா” என்றார்.
அவன் எரிச்சல் அவனுக்கு
இவர் எரிச்சல் இவருக்கு.