சரஸ்வதி பூஜை/எஸ்ஸார்சி

(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும்
நிகழ்வில் வாசித்த கவிதை )

லட்சம் லட்சமாய் பணம் கட்டுவோம்
வண்ண வண்ணப் பேருந்தில்
பிள்ளைகளை அள்ளிப்போவார்கள்
கல்விக்கூடங்களில் எத்தனை ரகங்கள்
யாரும் சீண்டாதது அரசுப்பள்ளி
தனியார் பள்ளியிலோ ஏற்றங்கள் இறக்கங்கள்
எத்தனை எத்தனை.
சமூகத்தைப் பிளக்கும் கூர் ஆயுதங்கள்
அத்தனையும்.
சீருடை என்பது பேதம் தொலைப்பதுவா?
இல்லவே இல்லை
பள்ளிகளின் பெயர்களே பிஞ்சுகளிடை
பேதம் வளர்க்கும் தொட்டில்களாயின
‘படித்த பெண்களை ஆசான்களாக்கு’ கொடு
பெயருக்கு ஊதியம்
போதுமப்பா போதும்
நான் நீ எனப்போட்டா போட்டி
அலைமோதும் கூட்டம்
வாத்திமார்களின் வயிற்றுப்பசிதான்
நிர்வாகத்தின் முதல்

சரஸ்வதி பூஜையாம்
என்றெமக்கு விளங்குவது
சரி பொருள்.

2 Comments on “சரஸ்வதி பூஜை/எஸ்ஸார்சி”

Comments are closed.