13.10.2022 – வியாழக்கிழமை
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: ரொம்ப நாட்கள் ஆகி விட்டன. நாம் சந்தித்து.
அழகியசிங்கர் : ஆமாம்.
ஜெகன் : சந்தித்து என்ன பேசுவது என்பது அலுப்பாகத்தான் இருக்கிறது.
மோகினி : எதையாவது பேசலாம். எத்தனையோ இருக்கின்றன பேச.
அழகியசிங்கர் : உண்மைதான்.
மோகினி : இப்போது பேசப் 'பொன்னியின் செல்வன்' மாட்டிக்கொண்டிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். கலகலப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.
ஜெகன் : ஆனால் மக்கள் குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அழகியசிங்கர்: நீங்கள் படத்தைப் பார்த்து விட்டீர்களா?
ஜெகன் பார்த்துவிட்டோம்.
அழகியசிங்கர் : நான் இன்னும் ஒருமுறை பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
மோகினி : நானும்.
ஜெகன் : நானும்தான்.
மோகினி : வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் திரும்பவும் இன்னுமொருமுறை புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று சொல்வது.
அழகியசிங்கர் :நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது படித்தது. திரும்பவும் இப்போது படிக்கத் தொடங்கியிருக்கிறேன். சில பெயர்களைத் தவிரக் கதை முழுவதும் மறந்து விட்டேன். திரும்பவும் வாசிப்பது என்பது புதிதாக வாசிப்பதுபோல் உள்ளது.
ஜெகன் : நாங்களும் வாசிப்பதாக உள்ளோம்.
அழகியசிங்கர் : தினமும் ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
மோகினி : நாளைக்கு நடக்கும் கதைஞர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சிக்கு கல்கி சிறுகதைகளைத்தான் பேச உள்ளீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். கல்கி மட்டுமல்ல என் நண்பர் பஞ்சாட்சரம் செல்வராஜின் கதைகளையும் வாசிக்க உள்ளோம்.
மோகினி : கதையின் ஒரு வரியை நீங்கள் குறிப்பிடுவீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். அதற்கு ஒரு கதையை நான் இரண்டு முறை படிக்க வேண்டும். ஒரு பாரா ஒவ்வொரு கதையைப் பற்றி எழுத வேண்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
மோகினி : போதும்
அழகியசிங்கர். நாம் சந்தித்துப் பேச ஆரம்பித்து விட்டாயிற்று. இனிமேல் தொடர்ந்து பேசலாம்
.
இரவு 10.37 மணி