திராவிட நல்திருநாடு/கோவை எழிலன்

இலக்கிய இன்பம் 61

ஒளிப்படக் கலையில் பெரிய உருவத்தைக் காட்டி பின் சிறிது சிறிதாக அருகில் வருவது போல் பெரிதாக்கிக் காட்டுவர்.

இப்பாடலில் முதலில் உலகைக் கடல் என்னும் ஆடை அணிந்த ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். அவ்வுலகின் அழகிய முகமாக நம் பாரதம் திகழ்கிறது. அம்முகத்தின் நெற்றியாகத் தென்னிந்தியாவும் அந்நெற்றியின் திலகமாகத் திராவிடப் பொன்னாடும் திகழ்கின்றன. அத்திலகத்தின் நறுமணமாகத் திகழ்வது தமிழ் மொழி.

பலருக்கும் தெரிந்த இப்பாடலடிகளைக் கொண்ட தமிழ்த்தாய் வாழ்த்தின் முழு வடிவம் இங்கே

“நீராரும் கடலுடுத்த
நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத்
திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும்
தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல்
அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க
இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும்
படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன்
இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே
ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்
கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!”