அது வரை /நாகேந்திர பாரதி

மரக்கிளையில்
ஊர்ந்து செல்லும்
அணிற்குஞ்சு அழகு

பால்கனியில் சாப்பாட்டைப்
பதம் பார்க்கும்
காக்கையும் அழகு

ஒரு நாள்
அணிற்குஞ்சைக்
கவ்விக்கொண்டு
பறந்து சென்ற
காக்கையைப்
பார்க்கும் வரை