பேச்சுத் துணை/ நாகேந்திர பாரதி


————————-
சன்னலோர மரத்தின்
இலைகள் அசையும் சப்தமும்

உள்ளிருந்து கீச்சிடும்
பறவைகளின் சப்தமும்

வேறு யாருக்கோ
என்றுதான் நினைத்திருந்தார்

முதுமையின் படுக்கையில்
சன்னலோரம் கிடந்த போதுதான்

அவை தனக்கே என்று
தெரிய வந்தது

One Comment on “பேச்சுத் துணை/ நாகேந்திர பாரதி”

Comments are closed.