21.10.2021 – வியாழன்
அழகியசிங்கர்
அழகியசிங்கர் : இனிய காலை வணக்கம்.
மோகினியும் : காலை வணக்கம்.
அழகியசிங்கர் : எனக்குத் தினமும் 3 அல்லது 4 பேர்கள் வாட்ஸ்ப்பில் காலை வணக்கம் சொல்லாமலிருப்பதில்லை.
ஜெகன் : இப்போது எழுதப்படுகிற கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அழகியசிங்கர் : திருப்தியாக இல்லை. ஆனால் எனக்குப் பிடித்த கவிஞர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஞானக்கூத்தன். இன்னொருவர் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார்.
ஜெகன் : அவர் பெயர் என்ன?
அழகியசிங்கர் : சொல்ல மாட்டேன். அவர் கவிதைகளை மட்டும் இன்னும் ரசித்துக்கொண்டிருக்கிறேன்.
மோகினி : நீங்கள் இப்படிச் சொல்வது மற்றவர்களைக் கோபப்படுத்தி விடும்.
அழகியசிங்கர் : ஒவ்வொருடைய கவிதையைப் படிக்கும் போது அதிருப்திதான் அதிகமாகத் தென்படுகிறது.
ஜெகன் : கதை.
அழகியசிங்கர் : கதை கொஞ்சம் பரவாயில்லை.
மோகினி : அதிகமாகப் புரியாதத் தன்மை கவிதையில்தான் இருக்கிறது. கதைகளில் இல்லை.
அழகியசிங்கர் : ஆமாம்.
ஜெகன் : நீங்கள் எதோ யோசித்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.
அழகியசிங்கர் : ஆமாம். நான் ஒரு கவிதைப் புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். என் இருப்பிடத்தில் எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை.
மோகினி : இன்று கூட புத்தகம் வாங்கி வந்தீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். நேஷனல் புக் டிரஸ்ட போய் புத்தகங்கள் வாங்கி வந்தேன். காலந்தோறும் பெண் என்ற ராஜம் கிருஷ்ணன் புத்தகம் ஒன்று வாங்கி வந்தேன்.
ஜெகன் : அதிலிருந்து ஒரு கட்டுரையை எடுத்து நாளை நம்முடைய இதழில் சேருங்கள்.
அழகியசிங்கர் : சரி
மோகினி : நான் அவசரமாக ஒரு இடம் போக வேண்டும். நீங்கள் பேசுங்கள்.
அழகியசிங்கர் : எல்லோரும் கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம்.