நகுலனின் சுருதி கவிதைகள்

நகுலன் 

கனல் (2)

ஒரு
வரிப்புலி
கனல்
உமிழும்
அதன்
கண்கள்
என் உன்மத்த
வேகம்.

சுருதி

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு .