சிதம்பரத்தில் /க நா சு

உலகம் உய்ய
அறிஞர்கள் ஞானம் பெற
ஓயாத நடனம் ஆடி
இன்று ஓய்ந்து விட்டான்
நடனராஜன்.
இப்போது அவன்
ஆடுவதுக்
குண்டுக் கொசு விரட்ட –
கைமறித்துக் கால் தூக்கி
ஆடுகின்றான்.

பக்கத்தில்
மீளாத தூக்கத்தில் ஆழ்ந்துறங்கும்
கோவிந்த ராஜனையோ
எந்தப் பட்டணத்து
எத்தனை கொசு கடித்தாலும்
எழுப்ப இயலாது.

ராஜாக்களின் காலம்
ஒடுங்கி விட்டதில்
ஆச்சரியம் எதுவுமில்லை.