குருவும் சிஷ்யனும்/க நா சு

கைநீட்டித் தலையிலே வைத்து
உபதேசம் செய்து முடித்த
குருவை வணங்கி
இடத்தமர்ந்த சிஷ்யனை

‘விளங்கிற்றா?’
என்று குரு வினவ

‘விளங்கிற்று’
என்று சிஷ்யன் கூற

‘என்ன விளங்கிற்று
எனக்கும் சொல்’
என்று சகபாடி கேட்டான்

‘குருவே சொல்வார்’
என்று பதில் வந்தது