ஆசாரக்கோவை, 5, 6/
வளவ. துரையன்

எச்சிலுடன் தீண்டத் தகாதவை
(இன்னிசைக் சிந்தியல் வெண்பா)


எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.


பொருள் விளக்கம்:

விலங்க்கு, சான்றோர், நெருப்பு, கடவுள், உச்சந்தலை ஆகியவற்றை ஒருவன் எச்சிலுடன் இருக்கும் போது தீண்டக்கூடாதவை ஆகும்.

எச்சிலுடன் காணக் கூடாதவை
(இன்னிசைக் சிந்தியல் வெண்பா)


எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென
நன்கறிவார் நாளும் விரைந்து.
பொருள் விளக்கம்:

நன்கு விஷயம் அறிந்தவர்கள் ஒரு நாளும் எச்சிலுடன் இருக்கும் போது புலையன், நிலா, சூரியன், நாய், எரி நட்சத்திரம் ஆகியவற்றை பார்க்க மாட்டார்கள்.
புலை: அசுத்தம், தீய நெறி