போகன்சங்கர் கவிதை

குருவிகளின் வாழ்வில் பலதரம் உண்டு
பெரு நகரத்தில் உயரமான கட்டிடங்களின் ஜன்னல் விளிம்புகளில்
ஒண்டி வாழ அனுமதிக்கப்பட்ட குருவிகள்
பச்சைப் பச்சைச் சதுரமாய்
நீண்டு போகும் வயல்வெளிகளை
மின்சாரக் கம்பிகளின் மீது
அபாயகரமாக நின்றுகொண்டு
மேற்பார்வை செய்யும் குருவிகள்
காட்டில் இலையோடு இலையாக
வளவளக்கும் குருவிகள்
வேட்டையாடிகள் கையால்
சுடப்பட்டுத் தின்னப்படும் குருவிகள்.
பாடலின் திளைப்பில் கவனமற்ற பொழுதொன்றில்
சர்ப்பத்தின் வாய்ப்படும் குருவிகள்
வானத்துக் குருவிகளைப் பாருங்கள்
அவை நாளை தங்களுக்கு
என்ன நிகழும் என்று அறியாதிருக்கிறார்கள்.

(புலனத்தில் பதிவு செய்தது வளவ. துரையன்)