உடனே கவிதை/மதுவந்தி

பொத்தானை அமுக்கினால்,
விளக்கு எரிகிறது,
வண்டி ஓடுகிறது,
பணம் வருகிறது,
வாக்கு போட்டு
அரசு மாறுகிறது,
கவிதை வராதா என்ன?

யாரேனும் பொத்தானை
அமுக்குங்கள்.