அன்புள்ள ஜெ/ஜெயலட்சுமி சங்கர்

பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு அனுபவம். என் இடதுகையும் காலும் விளங்காமல் போயிவிட்டது. அப்போது அனுராதா ரமணன் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் அந்த மாதிரி ஒரு நோய்க்கு ஆளானதைப்பற்றிச் சொன்னார். அவர் தன் காலுடன் அன்பாக நெருக்கமாகப் பேசிப்பேசி அதை எப்படிச் சரிசெய்துகொண்டார் என்று எழுதியிருந்தார். நானும் அப்படி பேச நினைத்தேன். பேசமுடியவில்லை

ஆனால் ஒருநாள் எங்கோ போய்விட்டு வந்தபோது சாலையோரம் ஒரு பெரிய சிலை. காரை நிறுத்திவிட்டு அதில் இருந்த அம்மனிடம் நான் போய் நேருக்குநேர் பேச ஆரம்பித்தேன். நெஞ்சில் கையை வைத்து அழுதபடியே பேசினேன். நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டேன். திரும்பும்போது மனம் லேசாகிவிட்டிருந்தது. என்னவானாலும் சரி என்று தெளிவை அடைந்தேன். ஒருவருடத்திலே குணமானேன். ஆனால் மனசு தெளிந்துவிட்டது. நம் கையில் ஒன்றும் இல்லை என்று தெரிந்துவிட்டது

இந்த கொடூரமான தெய்வங்கள் கொடூரமானவை அல்ல. அவை கொடூரமாக தெரிவது நாம் பயப்படுவதனால்தான். நாம் அந்த அச்சத்தை கடந்து அவற்றுடன் பேசினால் இந்த பூமியை ஆட்சிசெய்யும் சில சக்திகளை அருகே காணமுடியும்

  • ஜெயமோகன்

முகநூலில் : ஆர்.கந்தசாமி