எடுக்கின்றகைகளிலே நம்பிக்கை விளங்கட்டும்
தடுக்கின்ற மனதெல்லாம் தளராமை போகட்டும்.
படுக்கின்ற பொழுதெல்லாம் நிம்மதி நிலவட்டும்
நடுக்கம் மனதிடையே நில்லாமலாகட்டும்.
ஒடுக்கத்தின் நிலையதும் ஒதுங்கியே போகட்டும்
இடுக்கன் ஒருநாளும்
இல்லாமல் போகட்டும்
அடுக்கான இன்பத்தில்
ஏற்றம் பிறக்கட்டும்
நடு’கண்’ணுடையோனை
நினைந்துவிளக்கேற்றுவோம்.🙏🏽
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்