பாபாசாகேப் அம்பேத்கரின் கடைசி 24 மணி நேரங்கள்

அம்பேத்கர் மரணம் அடைவதற்கு முதல் நாள் அதாவது டிசம்பர் 5 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு படுக்கையை விட்டு எழுந்தார். அவரது மனைவி சவிதா அம்பேத்கர் தேநீர் கொண்டு வந்து அவரை எழுப்பி விட்டார்.

அதன் பின்னர் இருவரும் தேநீர் அருந்தினர். இதற்கிடையே அலுவலகத்துக்கு கிளம்பியிருந்த நானக்சந்த் ரட்டு அங்கு வந்தார். அவர்கள் தேநீர் அருந்தியவுடன் கிளம்பினர்.

அம்பேத்கர் முழுவதுமாக காலைகடன்களை முடிப்பதற்காக சவிதா அம்பேத்கர் உதவினார். பின்னர் அவரை காலை உணவு உண்பதற்காக அழைத்துச்சென்றார்.

பாபாசாகேப் அம்பேத்கர், சவிதா அம்பேத்கர், டாக்டர் மால்வங்கர் மூவரும் இணைந்து காலை உணவு உண்டனர். பின்னர் பங்களாவின் வராந்தாவில் அமர்ந்து மூவரும் உரையாடினர். பாபாசாகேப் நாளிதழ்களை படித்தார்.

இதன் பின்னர் சவிதா அம்பேத்கர் சமையல் அறைக்கு சென்று விட்டார். பின்னர் பாபாசாகேப், டாக்டர் மால்வங்கர் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அம்பேத்கர்
பட மூலாதாரம்,GETTY IMAGES
மதியம் 12.30 மணியைப் போல சவிதா அம்பேத்கர், பாபாசாகேப்பை மதிய உணவுக்காக அழைத்தார். அந்த சமயத்தில் பாபாசாகேப் நூலகத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார்.

புத்தரும் அவரது தம்மமும் என்ற (The Buddha and His Dhamma) புத்தகத்தின் முன்னுரையை முழுவதுமாக எழுதி முடித்தார். சவிதா அம்பேத்கர், பாபாசாகேப் அம்பேத்கருக்கு மதிய உணவு எடுத்து வந்தார். அதனை உண்டபின்னர் அம்பேத்கர் ஓய்வு எடுத்தார்.

டெல்லி வீட்டில் சவிதா அம்பேத்கர், தானே நேரடியாக மார்க்கெட் சென்று புத்தகங்கள், உணவு, பானங்கள் வாங்கி வருவது வழக்கம். பாபாசாகேப் அம்பேத்கர் உறங்கும்போதோ அல்லது நாடாளுமன்றத்துக்கு சென்றிருக்கும்போதோ அவர் இவ்வாறு செல்வது வழக்கம்.

பாபாசாகேப் அம்பேத்கர் டிசம்பர் 5 ஆம் தேதி மதியம் உறங்கி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது பொருட்கள் வாங்குவதற்காக சவிதா அம்பேத்கர் மார்கெட் சென்றிருந்தார். டிசம்பர் 5ஆம் தேதி இரவு டாக்டர் மல்வங்கர் விமானம் மூலம் மும்பை செல்ல திட்டமிட்டிருந்தார்.

எனவே அவர் மும்பைக்கு கொண்டு செல்வதற்காக சிலவற்றை வாங்குவதற்காக , சவிதா அம்பேத்கருடன் மார்க்கெட் சென்றார். பாபாசாகேப் அம்பேத்கரின் தூக்கம் கெட்டு விடும் என்பதால், அவரிடம் ஏதும் சொல்லாமலே டாக்டர் மல்வங்கர் வெளியே சென்று விட்டார். மதியம் 2.30 மணியைப் போல சவிதா அம்பேத்கர், டாக்டர் மல்வங்கர் இருவரும் மார்க்கெட் சென்றனர்.

மல்வங்கர் மாலை 5.30மணிக்கு திரும்பி வந்தார். அப்போது பாபாசாகேப் கோபமாக இருந்தார்.

டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூலில் இது பற்றி கூறியுள்ள சதவிதா அம்பேத்கர், ‘சாகேப் கோபமாக இருப்பது ஒரு புதிய விஷயம் அல்ல. வைத்த இடத்தில் புத்தகம் இல்லை என்றாலோ , உரிய இடத்தில் பேனா கிடைக்கவில்லை என்றாலோ பங்களாவில் உள்ள அனைவர் மீதும் அவர் கோபப்படுவார்.

அவரின் விருப்பத்திற்கு மாறாக நடந்தாலோ அல்லது எதிர்பார்த்தபடி நடக்காத சிறிய விஷயத்துக்காகவோ அவரின் கோபம் தலைக்கு ஏறும். அவரின் கோபம் இடிபோல இருக்கும். சாகேப்பின் கோபம் சிறிது நேரமே இருக்கும். விருப்பமான புத்தகம் , நோட்டு புத்தகம் அல்லது பேப்பர் கிடைத்து விட்டால், அடுத்த நிமிடமே அவரது கோபம் மறைந்து விடும்,’ என்று கூறியிருக்கிறார். மார்க்கெட்டில் இருந்து வந்த பின்னர், பாபாசாகேப்பின் அறைக்கு சவிதா அம்பேத்கர் சென்றார். அப்போது வருத்தத்துடன் அம்பேத்கர் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் அவரிடம் எங்கே சென்று வந்தேன் என்பதை விவரித்த பின்னர் அம்பேத்கருக்கு காபி எடுத்து வருவதற்காக நேரடியாக சமையலறைக்கு சென்று விட்டார்.

ஜெயின் மதத்தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளைக் கொண்ட குழுவினர் முன்பே பெற்ற அனுமதியுடன் இரவு 8 மணிக்கு அம்பேத்கரை சந்தித்தனர். பெளத்தம்-சமணம் குறித்து குழுவினரும், பாபாசாகேப் அம்பேத்கரும் பேசிக் கொண்டிருந்தனர்.

பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் 12 ஆவது தொகுதியில் இது பற்றி எழுதியுள்ள சங்தேவ் கைர்மோட், டிசம்பர் 6ஆம் தேதி ஜெயின் கூட்டம் ஒன்று நடக்கப்போகிறது என கூறிய அவர்கள், சமணம்-பெளத்தம் இடையே ஒற்றுமையை கொண்டு வருவது குறித்து சமண துறவிகளுடன் அம்பேத்கர் ஆலோசனை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர் எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே டாக்டர் மல்வங்கர் மும்பைக்கு கிளம்பி சென்றார். அப்போது பாபாசாகேப் அம்பேத்கர், குழுவினருடன் பேசிக்கொண்டிருந்தார். மல்வங்கர் அம்பேத்கரிடம் அனுமதி பெற்று அவர் கிளம்பி சென்றதாக தனது புத்தகத்தில் சவிதா அம்பேத்கர் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் அம்பேத்கர்: சட்டமேதையின் இன்னொரு முகம் பற்றி தெரியுமா?
31 ஜனவரி 2021
அம்பேத்கர் ‘தோல்வியடைந்த’ ஒரு பாலியல் கல்வி குறித்த வழக்கின் கதை
6 டிசம்பர் 2021
’ஜெய் பீம்’ முழக்கத்தை முதலில் வழங்கியது யார்? அது எப்படி தொடங்கியது?
18 நவம்பர் 2021
எனினும், சங்தேவ் கைர்மோட்எழுதியுள்ள அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், டாக்டர் மல்வங்கர் கிளம்பும்போது ஒரு வார்த்தை கூட அம்பேத்கரிடம் சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.

“அடுத்த நாள்(டிச்ம்பர் 6ஆம் தேதி) என்னுடைய செயலாளரிடம் இருந்து என்னுடைய நேரத்தை அறிந்து கொண்டு மாலையில் சொல்கின்றேன். நாம் ஆலோசிக்கலாம்,” என்று பாபாசாகேப் அம்பேத்கர், ஜெயின் குழுவினரிடம் சொன்னார். பின்னர் அந்த குழுவினர் கிளம்பிச்சென்றனர்.

பின்னர், புத்தம் சரணம் கச்சாமி என்ற வரிகளை பாபாசாகேப் அம்பேத்கர் மெதுவான குரலில் பாடியபடி இருந்தார் பாபாசாகேப் மகிழ்ச்சியான தருணங்களில் இருக்கும்போது புத்த வந்தனம் மற்றும் கபீர் வரிகளை வாசிப்பது வழக்கம் என சவிதா அம்பேத்கர் கூறியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து காம்பவுண்டுக்குள் சவிதா அம்பேத்கர் எட்டிப்பார்த்தார். ரட்டுவிடம் அம்பேத்கர், புத்த வந்தனம் இசை தட்டை ரேடியோ கிராமில் போடும்படி கேட்டுக்கொண்டார்.

டைனிங் டேபிளில் அமர்ந்து இரவு உணவை எடுத்துக் கொண்ட அம்பேத்கர், சிறிதளவு மட்டுமே சாப்பிட்டார். இதன் பின்னர் சவிதா அம்பேத்கர் இரவு உணவை முடித்தார். அவர் சாப்பிடும்வரை அம்பேத்கர் அங்கேயே உட்கார்ந்திருந்தார். சலோ கபீர் தேரா பவாஸ்கர் தேரா என பாபாசாகேப் அம்பேத்கர் பாடியபடி இருந்தார்.

பின்னர் ஊன்றுகோலின் உதவியுடன், அம்பேத்கரை சவிதா அம்பேத்கர் படுக்கைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அம்பேத்கர் சில புத்தகங்களை உடன் எடுத்துச் சென்றார்.

போகும்பொழுது, ரட்டுவிடம் புத்தர் மற்றும் அவரது தம்மம் என்ற புத்தகத்தின் முன்னுரையின் பிரதி, எஸ்.எம். ஜோஷி, ஆச்சார்யா அட்ரேவுக்கு எழுதப்பட்ட கடிதங்களின் பிரதிகளையும் கொடுத்து மேசையில் வைக்கச் சொன்னார். இந்தப் பணிகளை முடித்த பின்னர் ரட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் சவிதா அம்பேத்கர் தனக்கான பணிகளில் மூழ்கினார்.

நன்றி: பிபிசி தமிழ்