கடிதம்/க நா சு

அணிலாடு முன்றிலில்
அசையாது நீ உட்கார்ந்திருந்தாய்
பட்டப் பகலிலும்
பக்கத்தில் யாரும் எதுவும்
இல்லாத நிலையிலும்
உன்னைக் கண்டு கொள்வதே
எனக்கு எளிதாக இருக்கவில்லை.

சிட்டொன்று சிவ்வென்று
பறந்துவந்து உன் தலையில்
உட்காரும் தறுவாயில்
பீதியடைந்து
பறந்து திரும்பியது பார்த்து
உன்னை அடையாளம்
கண்டு கொண்டேன்.

பார்த்துக்கொண்டே
பலயுகங்கள் நின்றேன்.
அணில்களை விரட்டவோ
உன் சிந்தனைகளைக் கலைக்கவோ
மனசில்லாமல்
திரும்பி விட்டேன்.


.