
எங்கிருந்து பிறப்பெடுக்கிறது
இந்த காட்டாறு?
உச்சி மலையில் திறந்திருக்கும் இரகசிய அடுக்குகளிலிருந்தா ?
உள்ளே பிரவேசித்துப் பார்க்கிறேன்
புலப்படதாத பக்கங்களில்
கசியும்மூலநதிக்கு
சாத்தான்
தன் பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கிறது
புனல் பொங்கி பிரவகித்து
தேகத்தை கடக்கும் போது
நான் என் பெயரை சூட்டி மகிழ்கிறேன்
பெயர்களை கடந்தபின்பு
தனக்குள் கலந்து அடங்கும்
யாவற்றுக்கும்
நீ கடலென்று உன் பெயரை
சூட்டிக்கொள்கிறாய்

நன்றிக.