என்பா5

அழகியசிங்கர்

என்பா 51

எதாவது கவிதை எழுத
வேண்டுமென்று நினைத்தேன்.எதைப் பற்றி எழுதலாம்
காதல் இருக்கவே இருக்கிறது. வீர
வசனத்தில் எழுதலாம் வாருங்கள்.

என்பா 52

கடகட கிடுகிடு
வாழ்க்கைத் தத்துவம்
சடசட சிடுசிடு
உன்னுடைய இயல்பு
இருக்கவே இருக்கிறது
உன் வாழ்க்கை
எங்கும் காணினும் இன்பம்

என்பா 53.

தடதடவென்று மாடிப் படிகளில் இறங்க
வேண்டாம். உங்களுக்குக் கற்றுத்
தருகிறது மாடிப்படிக்கட்டுகள்
சிறந்த பாடத்தைப் புரியவில்லையா
நிதானம் என்றும் வேண்டும்.

என்பா 54

நான் இப்போது சென்னையில் இருக்கிறேன்
சிலகாலம் மயிலாடுதுறையில்
வசித்து வந்தேன்
ஓடுவேன் டூவீலரில்
பந்தநல்லூர் கிராமத்துக்கு
சாப்பிட ஓட்டல் இல்லை

என்பா 55

அர்த்தமில்லா கவிதைகளை
தினமும் எழுதுகிறார்கள்
கவிதைகள் இல்லாத
கவிதைகளைக் கொண்டாடுகிறார்கள்
கவிதை எழுதிக்கொண்டே
கிரிக்கெட் பார்க்கிறார்கள்.
வார்த்தைகள் ஒளிந்து கொள்கின்றன