அன்புச்செல்வி சுப்புராஜூ இரண்டு சிறிய கவிதைகள்

கவிதை ஒன்று

அனுபவ விளைச்சலில்
அறுவடை ஆகுகிறது
பெரும்பான்மை பதர்களுக்கு நடுவே
சிறிதளவு நெல்லும்…

கவிதை இரண்டு

உதிர்ந்த சருகுகளின்
நொறுங்கல் ஓசையில்
மறைந்து உள்ளது
கிளைகளின் உரசல்!

அன்புச்செல்வி சுப்புராஜூ