இலையுதிர்காலம் வரும்போது, லிடியா/போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா

தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா, ரிக்கார்டோ ரீஸ் என்ற புனைபெயரில் எழுதிய கவிதை. பெசோவாவின் “இந்த பிரபஞ்சத்தைவிடச் சற்றே பெரியது” தொகுப்பிலிருந்து. ஆங்கிலத்தில்: ரிச்சர்ட் செனித்.

இலையுதிர்காலம் வரும்போது, லிடியா
அது குளிர்காலத்தை உள்ளகமாகக்
கொண்டிருக்கும்போது
நாம் ஒரு எண்ணத்தைக் காப்பில் வைப்போம்
அது மற்றவர்களுக்குரிய
வசந்தமாக இருக்கவேண்டாம்
அது கோடையாகவும் இருக்கவேண்டாம்
நாம் அதன் இறந்தவர்களாய் இருக்கிறோம்
நமது எண்ணம்
எது கடந்து செல்கிறதோ அதன் மிச்சம்மீதியைப்
பற்றியதாய் இருக்கட்டும்
இலைகள் வாழும் இப்போதைய மஞ்சள் நிறம்
அவற்றை வித்தியாசமாக மாற்றுகிறது