யார் அந்த மூவர்?

வளவ. துரையன்

       கம்பனைக் காண்போம்—5                                                 

தேவ பாடையின் இக்கதை செய்தவர்   
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய     
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப் 
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ

கம்பன் எழுதிய இராமாயணம் ஒரு வழிநூலாகும். அதற்கு முதல் நூல்கள் உள்ளன. தேவ பாடை என்பது தேவ பாஷை எனும் வடமொழியைக் குறிக்கும். அம்மொழியில் இந்த இராமகாதையை மூன்று பேர் பாடியுள்ளார்கள். உரையாசிரியர்கள் அம்மூவர்களாக முறையே வால்மீகி, வசிட்டர், போதாயனர் ஆகியவர்களைக் காட்டுகின்றனர். ”அவர்களில் முதன்மையான நாவன்மை நிரம்பப்பெற்றவரான வால்மீகி உரைத்த முறையே நான் இக்காப்பியத்தைச் செய்த முறையாகும்.” என்று கம்பன் கூறுகிறான்.