சிரிப்பு/மீனாட்சி சுந்தரமூர்த்தி

ஆழக்கடல் அன்பினால்
கடந்து
அசோக வனத்தில் அன்னை
கண்டு,
தன்வினை தன்னைச் சுட்டது
என்று
மூடர் இட்ட தீயில் சிவந்த
நகரை
மீளும் முன்னம் கண்டு
சிரித்தாயோ
சினத்தில் தூதனே.