கிராமத்துக் கீறல்கள் /நாகேந்திர பாரதி

பூப்பூத்த மறுநாளே
காய்காய்க்கும் கல்யாணம்

புடவைக்குள் தொலைந்திட்ட
தாவணியின் விளையாட்டு

வேர்விட்ட செடிக்கிங்கு
விழுதுகளின் பொறுப்புகள்

விளக்குக்கு ஏற்றிவிட்ட
சூரியனின் சுடுநெருப்பு

இறப்புக்குத் தப்பித்து
இருக்கின்ற பெண்ணிவளின்

இளமையினைப் பலியாக்கும்
இரக்கமில்லாக் கிராமங்கள்

2 Comments on “கிராமத்துக் கீறல்கள் /நாகேந்திர பாரதி”

Comments are closed.