சந்தை/ஷண்முக சுப்பையா

திங்கள் தோறும்
எங்களூரில்
சந்தை கூடும்
சந்தைக்கு
மந்தை மந்தையாய்
மாடுகள்
மக்களுடன்
வந்து சேரும்
வந்து சேர்ந்தால்
பின்னர்
சந்தை கலையும் வரை
மாடுகளுக்காய்
மக்களுக்குள்
நடக்கும் பேரம்
ஒரே ஆரவாரம்!

One Comment on “சந்தை/ஷண்முக சுப்பையா”

Comments are closed.