ஆர் வத்ஸலா இரு என்பா கவிதைகள்

ஒன்று போல்

நற்திறனுடன் நாடினேன்
திரைப்பட உலகை
நல்லெழுத்துடன் அணுகினேன்
இணைய இதழாசிரியரை
இது பயன்படாது இங்கு
என்றார்கள்
‘ஹிட்’ வேண்டுமாம் இருவருக்கும்

மழையுடன்

இன்று காலை பலத்த மழை
அவள் நினைவை சுருட்டிக் கொண்டு
குடை கொடுத்தாள் அவள் நனைந்து
நாற்பது ஆண்டுகள் முன்பு