அழகியசிங்கரின் இரு என்பா கவிதைகள்

1.

கிண்டல் பண்ணுவது
அப்பாவி இணைய
ஆசிரியரை. அவர் நல்லவர். ஆனால்
வல்லவர் இல்லவே இல்லை எப்போதும்.
திரைப்படங்களைப் பார்க்க தவிர்ப்பார்

(இந்த என்பா தொடர் ரயில் என்பா)

2.

நான் கவிதை
எழுத உட்கார்ந்தேன்
கவிதை வாவாவென்று
மூளையைக் கசக்கினேன்
எளிதாக தோன்றவில்லை
எதுவும் எனக்கு
இன்னலே வாழ்க்கை ஆகுமா