பலி பீடம்/நாகேந்திர பாரதி

வெளிச்சக் கண்ணாடியில்
வெளுத்துத் தெரிந்தாலும்

விரட்டி வருகின்ற
வேட்கைப் பல்லிகள்

இரையைப் பிடிக்க
இறங்கிச் சென்றுவிட்ட

கறுப்புப் பல்லிக்காய்
காலத்தை நிறுத்தி விட்டு

நகர்ந்து வந்தன
கடிகார முட்கள்