ஆசாரக் கோவை 24–26/வளவ.துரையன்

பாடல் 24 : உண்ணும் போது

முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார், ஊணின்கண்
என்பெறினும் ஆன்ற வலமிரார், தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்.

பொருள் :


பெரியவர்களுடன் சமபந்தியாக இருந்து உண்ணும் பொழுது, அவர்கள் உண்ணத்தொடங்குமுன் தாம் உண்ணார், அவர்கள் உண்டு எழுவதற்கு முன்னால் தாம் எழமாட்டார்; அவர்களுடன் மிக நெருங்(க்)கி அமர்ந்துண்ணார்; அவர்களுக்கு வலதுபுறத்தில் அமர்ந்து உண்ணுதலும் ஆகாது.

பாடல் 25 : உண்ணும் போது

கைப்பன வெல்லாம் கடை, தலை தித்திப்ப,
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க, முறைவகையால் ஊண்.

பொருள் :


கசப்பான உணர்வை கடைசியிலும் இனிப்பானது முதலிலும் மற்ற சுவைகளை இடையிலும் பெரியவர்கள் பாராட்டும்படி கிரமமாக (முறைப்படி) உண்ணவேண்டும்.

பாடல் 26 : உண்ணும் போது

முதியவரைப் பக்கத்து வையார், விதிமுறையால்
உண்பவற்றுல் எல்லாம் சிறிய கடைப்பிடித்து
அன்பில் திரியாமை ஆசாரம் நீங்காமை
பண்பினால் நீக்கல் கலம்.

பொருள் :


தம்மைக் காட்டிலும் முதியவர் உண்ணும் பொழுது அவரை தம் அருகிலேயே வைத்துக்கொண்டு உண்ணக்கூடாது. விதிமுறைப்படி உண்ணும் பொழுது சிறிய பாத்திரங்களில் உணவு பொருட்களை வைத்துக்கொண்டு, அன்பு மாறாமல் ஆசாரம் தவறாமல் உண்ணவேண்டும். உண்டபின் பாத்திரங்களை முறையாகத் தள்ளிவைக்க வேண்டும்.