
- அவன் பேசாமலிருந்தான்.
எல்லோரும் திட்டிவிட்டுச்
சென்றார்கள். - நகுலனுடன் சேர்ந்து நகுலன் புத்தகம் போட்டான்.
ஆனால் ஒரு புத்தகம் கூட விற்கவில்லை
3.அவள் ஆட்டோவில் வந்து இறங்கினாள்.
அவள் வீட்டிற்குள் ஓடினாள்
- அவன் விரட்ட விரட்ட
அந்த நாய் அவனைச் சுற்றி சுற்றி வந்தது. - காதல் என்றால் என்ன
என்று கேட்டான்.
அவனுக்கு வயது 70.
அவளுக்கு 65.
