ஒரு வரிக் கவிதைகள்! /அன்புடன் ஆர்க்கே!

குத்திய முள்ளில் ரோஜாவின் கண்டனம்.

என்பதே கவிதை எனதே கவிதை என் கவிதை.

இனி நீ நீ நான் இனி நான்.

ஆயிரம் பொய்யா? அப்படியென்ன கல்யாணம்?

பாலைக்காட்டில் ஒட்டகத்தடம் தெரிவதில்லை.

அடர்வனக் காட்டிலும் ஒற்றையடிப் பாதை.

பற்றதுலேதுமின்றி படர்வதில்லை கொடிகள்.