இரண்டுவரிக் கவிதைகள்/ப.மதியழகன்

வருவான் என நினைத்தேன்
ஆனால் வரவில்லை.

நீயுமா என்றேன்
நானும் தான் என்றான்.

சலிக்கிறது காற்று
உச்சி வெயில்

நீ யார் என்றேன்
நான் தான் என்றான்

மனோவேகம் அதிகம்
ஒளிவேகத்தைவிட

கவிஞனின் பாடு
பெரும்பாடு

எழுதுவது கவிதையா என்றான்/
தாடியை வருடியபடி இல்லை என்றேன்

பிழைக்கத் தெரியாதவன் என்றான்/
அதான் எழுதுகிறேன் என்றேன்

கண்ணை மூடிக்கொண்டேன்
உலகம் இருண்டு விட்டது

செளக்கியமா என்றேன்
செளக்கியம்தான் என்றாள்!