அழகியசிங்கர்

மோகினி : இன்று ஒரு கூட்டம் போயிருந்தீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். நானும் மனைவியும் போயிருந்தோம்.
ஜெகன் : எந்தக் கூட்டம்.”
அழகியசிங்கர் : எழுத்தாளர் சிவசஙகரியின் சூர்ய வம்சம் கூட்டம்.
மோகினி : அக் கூட்டம் சவேரா என்ற நட்சத்திர ஓட்டலில் நடந்ததா?
அழகியசிங்கர் : ஆமாம். எழுத்தாளர் சிவசங்கரியின் ஆங்கில மொழியில் அவருடைய சுயசரிதம்.
ஜெகன் : ஏற்கனவே தமிழில் வெளிவந்திருக்கிறது.
மோகினி : இரண்டாண்டுகளுக்கு முன் தமிழில் வெளிவந்த புத்தகம்.
ஜெகன் : அதை மொழிபெயர்த்தவர் யார்?
அழகியசிங்கர் : சித்திர தீபா அருணாசலம்
மோகினி : நட்சத்திர ஓட்டலில் விருந்துடன் இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதி எல்லோருக்கும் அளிக்கப்பட்டது.
ஜெகன் : அந்தப் புத்தகத்தின் விலை ரூ.1000.
மோகினி : தயாரிப்பு அற்புதம்.
அழகியசிங்கர் : ஒரு புத்தகம் கிடைக்கிறது என்றால் எல்லோருக்கும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் படிக்க வேண்டுமென்ற எண்ணம் அவ்வளவு சுலபமாய் ஏற்படுவதில்லை.
மோகினி : அது உண்மை. இவ்வளவு நேர்த்தியான தயாரிப்பில் கொண்டு வரப்பட்ட இப் புத்தகத்தை ஒருவர் வாசித்தும் பார்க்க வேண்டும்.
ஜெகன் : நான் வாசிப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.
அழகியசிங்கர் : நான் இரண்டு பக்கங்கள் படித்தும் விட்டேன். லலிதா என்ற பெண்ணைப் பற்றிப் படித்தேன். எழுத்தாளர் சிவசங்கரிக்கு வலதுகரமாக இருந்தவர் லலிதா. அந்தப் பெண்ணைப் பற்றிய குறிப்புகளைப் படித்தேன்.
மோகினி : தினமும் இரண்டு பக்ககங்கள் படித்தால் சில மாதங்களில் முடித்து விடலாம்.
அழகியசிங்கர் : இதோஇப்ப ஆரம்பித்தாயிற்று இரண்டு பக்கங்கள் படிக்க.
ஜெகன் : இன்று போதும்.
மோகினி : நம் சபையைக் கலைத்து விடலாம்.
அழகியசிங்கர் : நல்ல இரவு மலரட்டும்.
